வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் ஒருவர் கைது

333 0

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று ஸ்கானர் இயந்திரத்துடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தாண்டிக்குளம் இராணுவ முகாமிற்கு அருகே குறித்த சந்தேக நபரின் உடமைகளை சோதனையிட்ட சமயத்தில் ஸ்கானர் இயந்திரத்தினை வைத்திருந்த குற்றச்சாட்டில் நெடுங்கேணி பகுதியினை சேர்ந்த நபரொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment