கட்சி மாறி தேர்தலில் வெற்றிபெற வேண்டிய தேவை எனக்கு இல்லை- தயாசிறி

235 0

aபாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ள தான் தயாரில்லையென திறன் அபிவிருத்தி  மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காகவும் அதன் அபிவிருத்திக்காகவும் செயற்படப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலை வெற்றி கொள்ள வேண்டுமாயின் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒரு பொது கூட்டணியொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒவ்வொரு கட்சியிலும் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கு தனக்குத் தேவையில்லையெனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment