ஹெரோயினுடன் இரண்டு பெண்கள் உட்பட ஐவர் கைது

226 0

மேல் மாகாணத்தில் மாத்திரம் கடந்த இரண்டு நாட்களில் 1.2 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதிவாய்ந்த ஹெரோயின் போதைப்பொருளுடன், இரு பெண்கள் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த சனிக்கிழமை வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகாராம வீதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்,  கொட்டுவில வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரை 234 கிராம் நிறையுடைய ஹெரோயினுடன் ஒருவரும், வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலியமுல்ல பகுதியில் 4 கிராம் நிறையுடைய ஹெரோயினுடன், வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரும், பாணாந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகரப் பகுதியில் வைத்து 2 கிராம் 100 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் ஒருவரும், கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோயிட வீதி பகுதியில் வைத்து வலான ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாரால் 5 கிராம் 100 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் 59 வயதுடைய பெண்ணொருவரும், கொம்பனித்தெரு பகுதியில் வைத்து 3 கிரேம் 617 மில்லிகிரோம் ஹெரோயினுடன் ஒருவரும் உட்பட ஐவரே இவ்வாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment