ஹங்வெல்ல படுகொலைச் சம்பவம் ,மேலும் இருவர் கைது!!

268 0

ஹங்வெல்ல – ஜல்தர வித்தியாலய மைதானத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய இரு சந்தேக நபர்களை குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ரனால மற்றும் ஜல்தர பிரதேசத்தை சேர்ந்த 16 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களாவர்.

கடந்த 28ஆம் திகதி நடந்த குறித்த படுகொலை சம்பவத்தோடு தொடர்புடைய நால்வர் ஏற்கனவே மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment