புதிய அரசியல் கட்சி அமைப்பது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாட்டு நிலை

470 0

Dinesh udya vimal vasu_CIபுதிய அரசியல் கட்சி அமைப்பது குறித்து கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.புதிய அரசியல் கூட்டணியில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸவிற்கு பொறுப்புக்கள் வழங்கப்படுவதனை கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விரும்பவில்லை. இதேவேளை, புதிய அரசியல் கட்சி அமைக்கும் பணிகளில் தமது பங்களிப்பினை மக்கள் விரும்பினால் நிச்சயம் அதற்கு செவிசாய்க்கப்படும் என அவா குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment