மத்­திய வங்கி ஊழல் மோச­டி­யுடன் தொடர்­பு­பட்ட எவ­ரையும் எம்­முடன் இணைத்­துக்­கொள்­ளப்­ போ­வ­தில்லை – வாசு­தேவ

317 0

பெரும்­பான்மை கிடைக்­கா­விட்­டாலும் மத்­திய வங்கி ஊழல் மோச­டி­யுடன் தொடர்­பு­பட்ட எவ­ரையும் எம்­முடன் இணைத்­துக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. அத்­துடன் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவும் இது­தொ­டர்­பாக வாக்­கு­மூலம் அளிக்­க­வேண்­டி­வரும் என தேசிய ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்கம் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வி­த்தார்.

 

சோஷலிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

மத்­திய வங்­கியின்  பிணை­முறி விசா­ர­ணைகள் இனிமேல் முறை­யாக இடம்­பெறும். விசா­ர­ணை­க­ளுக்கு தலை­யீடு செய்ய தற்­போது யாரும் இல்லை. மத்­திய வங்கி பிணை­முறி மோச­டிக்கு ரணில் விக்கி­ர­ம­சிங்­கவும் ஒரு தரப்பைச் சேர்ந்­தவர். அவ­ருக்கு எதி­ராக நாங்கள் முறைப்­பாடு செய்­தி­ருக்­கின்றோம். அவர் பிர­த­ம­ராக இருக்­கும்­வரை அந்த விசா­ரணை முறை­யாக இடம்­பெ­றாது என்­பதும் எங்­க­ளுக்கு தெரியும்.

அதனால் ரணில் விக்­கிர­ம­சிங்க தற்­போது பிர­தமர் பத­வியில் இல்­லா­மையால் விசா­ர­ணை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டாது. அத்­துடன் விசா­ரணை முறை­யாக இடம்­பெ­று­வதால் ரணில் விக்­கிர­ம­சிங்­கவும் அது­தொ­டர்­பாக வாக்­கு­மூலம் அளிக்க அழைக்­கப்­ப­டலாம். அத்­துடன் எமது அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வ­ரு­மாறு ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் நாங்கள் அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றோம்.

என்­றாலும் ஐக்­கிய தேசிய கட்­சியில் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­ன­வர்­க­ளையும் மத்­திய வங்கி ஊழல் மோச­டி­யுடன் தொடர்­பு­ப­டா­த­வர்­க­ளை­யுமே  நாங்கள் இணைத்­துக்­கொள்வோம். பாரா­ளு­மன்­றத்தில் எமக்கு பெரும்­பான்மை கிடைக்கும் என்ற நம்­பிக்கை இருக்­கின்­றது. அவ்­வாறு பெரும்­பான்மை கிடைக்­காது போனாலும் மத்­திய வங்கி ஊழல் மோச­டி­யுடன் தொடர்­பு­பட்ட எவ­ரையும் நாங்கள் இணைத்­துக்­கொள்­ளப்­போ­வ­தில்லை.

எமக்கு பெரும்­பான்மை பலத்தை நிரூ­பிக்க தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ர­வையும் நாங்கள் கோரி­யுள்ளோம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட்­ட­மைப்பின் தலை­வ­ருடன் இது­தொ­டர்­பாக கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். அவர்­களின் கோரிக்­கை­களில் எங்­களால் நிறை­வேற்ற முடி­யு­மான விட­யங்­களை செய்­து­ கொ­டுக்க தயா­ராக இருக்­கின்றோம்.

தற்­போது கட்சி மாறும் உறுப்­பி­னர்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. கட்சி மாறுதல் என்பது சாதாரண விடயமாகும். அத்துடன் அதற்காக யாருக்காவது சன்மானங்கள் வழங்கப்படுமாக இருந்தால் அதனை இலஞ்ச மாக கருதமுடியாது.அப்படியானால் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதும் இலஞ்மாகவே கருதப்படவேண்டும் என்றார்.

Leave a comment