வியாழேந்திரன் மட்டக்களப்பு மண்ணில் காலடி எடுத்து வைத்தால் செருப்பு மாலை. எதிர்ப்பு போராட்டம்!

336 0

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அமைச்சு பதவிக்காக கட்சி தாவிய சா.வியாழேந்திரன் மீது ஒட்டுமொத்த தமிழர்களும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா அமைப்பாளர் ஜெகன், இளைஞர் அணித்தலைவர் கார்த்திக் மற்றும் பல முக்கிய உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டு தமது கண்டனத்தை தெரிவித்தனர். சலுகைக்காக கட்சி தாவிய வியாழேந்திரன் என கடுமையான கண்டனங்களை வெளியிட்டனர்.

வியாழேந்திரன் மட்டக்களப்பு மண்ணில் காலடி எடுத்து வைத்தால் செருப்பு மாலை அணிவிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

30 கோடிக்கு விலைபோன வியாழேந்திரன் இனியும் வேண்டாம், மட்டக்களப்பு மக்களின் மானத்தை போக்கிய அமலுக்கு செருப்பு மாலை அணிவிப்போம் போன்ற பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தார்கள்.

நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Leave a comment