சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை

279 0

சென்னையில் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. வருடந்தோறும் அக்டோபர் 20-ம் தேதியில் வடகிழக்கு பருவ மழை துவங்கும். ஆனால் இந்த வருடம் சற்று தாமதாக துவங்க இருக்கிறது.இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு  மைய இயக்குனர் பாலச்சந்திரன் தென்மேற்கு மத்திய வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு வலுப்பெற இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 2 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை துவங்கும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இன்று (புதன்கிழமை) பகல் நேரத்தில் மிதமான வெயில் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் செய்தி நிறுவனத்தின் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment