வாள்களுடன் யாழில்.இளைஞன் கைது

267 0

யாழில்.இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில்  தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞனை கைது செய்யும் போது அவரிடமிருந்து இரண்டு வாள்களை தாம் கைப்பற்றியதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மேலும் , மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறிந்ததை அடுத்தே இளைஞனை கைது செய்ததாகவும் , கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

Leave a comment