இலங்கைக்கு மிக விரைவில் வருகிறாராம்

972 0

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதற்கு இந்தியாவின் பிரதான கட்சியான பா.ஜா.கவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். எனது வாழ்த்துக்களை மஹிந்தவிற்கு தொலைபேசி மூலமும் தெரிவித்துள்ளேன்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் அவர்களுடன் கலந்தாலோசித்து தக்க தீர்வை எடுப்பதாக மஹிந்த கூறினார்.

இலங்கைக்கு மிக விரைவில் நான் செல்லவுள்ளேன். எனது இலங்கைக்கான விஜயத்தின் போது தமிழக மீனவர்கள் எல்லை பிரச்சினை தொடர்பில் கலந்தாலேசித்து தீர்வொன்றை பெற நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்..

Leave a comment