கல்வி விழிப்புணர்வு பயிற்சி பட்டறை !-திருச்சி

12770 0

முதல் தலைமுறை தலித் மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு பயிற்சி பட்டறை எதிர்வரும் நவம்பர் மாதம் திருச்சியில் (தேதி, நிகழ்விடம் விரைவில் அறிவிக்கப்படும்) நடத்த துடி இயக்கம் ஒருங்கிணைக்கிறது. இந்த கூடுதலின் நோக்கமானது நமக்கான சமூக கல்வி பண்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் பங்குகொள்ள அழைக்கின்றோம்.

அம்பேத்கரியம் கற்கவும் நவீன கல்வி உலகில் மாணவர்கள் பெற வேண்டிய உரிமைகளையும் தகவல்களையும் பெறுவதோடு நின்றுவிடாமல் தாங்கள் சமூகத்திற்கு திருப்பி செலுத்துதல் என்ற கடமையில் விழிப்புணர்வு பெற்று நன்றியுணர்வோடு வாழ வழிவகை செய்யும் இப்பயிற்சி வகுப்பு ஆற்றுப்படுத்தும் என்றால் மிகையாகாது.

இப்பயிற்சி வகுப்பில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். தமிழக அளவில் மாவட்டத்திற்கு இரண்டு மாணவர்கள் (ஒரு ஆண், ஒரு பெண்) மட்டுமே பயிற்சி வகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும் நன்றி ஜெய்பீம்.

குறிப்பு: மாவட்ட வாரியாக நிகழ்வின் பங்கேற்பாளர்களை ஒருங்கிணைக்க நண்பர்கள், கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர்கள், அரசு ஊழியர்கள், கல்வி சார்ந்த பணிகளை முன்னெடுத்து இயங்கி வரும் தன்னார்வ களப்பணியாளர்களும் இந்த முயற்சியில் பங்கெடுத்துக் களப்பணியாற்றி வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டி உங்களது ஆதரவினை எதிர்நோக்குகிறோம்.

பார்வையாளர்களை பங்கேற்க செய்வோம்!
பங்கேற்பாளர்களை சாதிக்க செய்வோம்!!

வழக்கறிஞர் அசோக்குமார்
ஒருங்கிணைப்பாளர்
📚 துடி இயக்கம்
9894525254 / 9865425254

Leave a comment