அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணியில் 8 பேர்

202 0

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு அச்சிறைச்சாலையிலுள்ள 8 கைதிகளே காரணம் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த எட்டுப் பேரும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. ரி.பீ. அபேநாயக்க, மஹேஷ், திஸ்ஸ ரோஸா மற்றும் சாகர ஆகியோரும் இவர்களில் அடங்குவதாகவும் கூறப்படுகின்றது.

சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை சேவையில் ஈடுபடுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறைச்சாலையின் கூரையில் ஏறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment