தனியார் பஸ் குடை சாய்ந்து விபத்து

206 0

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் தனியார் பஸ்ஸொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக வவுனியா நகர் நோக்கிச் சென்ற தனியார் பஸ் மடுகந்தப் பகுதியில் பயணித்த போது வேகக் கட்டுப்பட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போது பஸ்ஸில் மூவர் மாத்திரமே பயணித்திருந்த நிலையில் அம் மூவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment