ஜமாலைக் கொன்றது நாங்கதான்!’ – நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி

4799 0

பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி துருக்கியில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்தினுள்தான் கொல்லப்பட்டார் என்பதை ஒருவழியாக சவுதி அரசு ஒப்புக் கொண்டுவிட்டது.

ஜமால்
கடந்த அக்டோபர் 2-ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தினுள் சென்ற ஜமால் கஷோகி திரும்ப வெளியே வரவேயில்லை. துருக்கி அரசு ஜமால் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்தது. கொலையில் சம்பந்தப்பட்ட 15 சவுதி பிரஜைகளின் பெயர்களையும் பட்டியலிட்டது. சவுதி அரசு இதை மறுத்தது. `சவுதி தூதரகத்துக்குள் வந்த ஜமால் வெளியே சென்றுவிட்டார். அவர் எப்படி மாயமானார் என்பது தெரியாது’ என்று சவுதி தூதரக அதிகாரிகள் தீர்க்கமாக கூறிவிட்டனர்.

Leave a comment