வடக்கு மாகாண முதலமைச்சரால் கிளிநொச்சி சந்தையின் மீள்நிர்மாணத்திற்கு நிதி ஒதுக்கீடு

304 0

c-m

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால், கிளிநொச்சி சந்தையின் மீள்நிர்மாணத்திற்கு ஒன்பது மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பதினாறாம் திகதி தீ விபத்தினால் எரிந்த கிளிநொச்சிப் பொதுச்சந்தையினை, மறுநாள் பார்வையிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு ஆவன செய்வதாகக் கூறிச் சென்றிருந்தார்.

இந்நிலையில், கரைச்சிப் பிரதேச சபையினரால் வழங்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் தீவிபத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப் பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு இன்று ஒன்பது மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் குறித்த ஒன்பது மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பூர்வாங்க வேலைகளை முடித்து குறித்த வேலைத்திட்டத்தினை ஒன்றரை மாத காலத்திற்குள் பூர்த்தி செய்து, பதிக்கப்பட்ட கிளிநொச்சி பொதுசசந்தை வர்த்தகர்கள் வெகுவிரைவில் அவர்களது வர்த்தகத்தினை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.