துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்

199 0

பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதாள உலக குழு உறுப்பினரான ஹசித எனப்படும் பண்டா என்பவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 4 ஆம் திகதி அதுருகிரிய, ஒருவெல பகுதியில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று (18) மாலை 6.30 மணியளவில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர், மாகந்துரே மதூஷ் மற்றும் அங்கொட லொக்க ஆகிய பாதாள உலக குழு தலைவர்களுடன் மிக நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் பல்வேறு முக்கிய குற்றங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment