கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் மீட்பு

197 0

குளியாபிட்டிய, கம்புராபொல பகுதியில் இருந்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளியாபிட்டிய, கம்புராபொல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சரத் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இனந்தெரியாத குழு ஒன்றினால் குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலத்தை பெண் ஒருவர் இன்று காலை கண்டதை அடுத்து பொலிஸாரிற்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கொலை சம்பவம் ஒன்றின் பிரதான சந்தேக நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment