குறித்த இருவரையும் கொழும்பு  நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை இம்மாதம் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து 27 கைதிகள் பலியாகினர்.

இதையடுத்தே குறித்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியோர் கைதுசெய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.