ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர் சமல் -வாசுதேவ

214 0

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர் சமல் ராஜபக்ஷ்வாகும். அவரை நியமிப்பதற்கு எமது கட்சி திட்டமிட்டு செயற்படவுள்ளோம்  என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருக்கவேண்டும் என்பது தொடர்பில் இதுவரைக்கும் நான் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை. கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் கட்சிகளுக்கிடையில் வீண் பிரச்சினைகள், தர்க்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தாமல் வந்தேன்.

இருந்தபோதும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பந்துள குணவர்த்தன ஜனாதிபதி வேட்பாளருக்கு மிகவும் பொருத்தமானவர் என தெரிவித்து அவர் ஒருவரின் பெயரை ஊடங்களுக்கு பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

அதனால்தான் இதுவரை காலமும் நான் பகிரங்கப்படுத்தாமல் இருந்துவந்தை வெளிப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. சமல் ராஜபக்ஷ் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானர் என்பதை நாங்கள் தெரியப்படுத்தவேண்டியதல்லை. அது எல்லோரும் அறிந்தவிடயம்.

Leave a comment