விபத்தில் தந்தையும் இரு மகன்களும் பலி

239 0

தெஹிஅத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சதுன்புர, லிஹிணியாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (14) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் இரு மகன்களும் உயிரிழந்துள்ளனர்.

Leave a comment