எதிர்வரும் காலத்தில் வாராவாரம் எரிபொருள் அதிகரிக்கலாம்-ரணில்

254 0

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் காரணமாக எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கல்கமுவ, எஹெட்டுவெவ பண்டாரகம பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் போது இலங்கையிலும் எரிபொருள் விலை மாற்றம் அடையும் எனவும் எதிர்வரும் காலத்தில் வாராவாரம் எரிபொருள் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment