பாதை நடுவில் பற்றி எரிந்த பஸ் வண்டி

11885 0

கண்டி – கம்பளை பிரதான பாதையில் பேராதனை பல்கலைக்கழக அக்பர் விடுதியின் முன்பாக தனியார்  பஸ் ஒன்று தீப்பிடித்து முற்றாக சேதம் அடைந்துள்ளது.

குறித்த பஸ் இன்று  மாலை  கம்பளை நோக்கிப் பயனிக்கும் போதே தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த பஸில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக  தீ பற்றியிருக்காலாம் என  பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பஸ்ஸில் ஏற்பட்ட தொலிநுட்ப கோளறு ஒன்றை திருத்திக்கொண்டு சென்ற பொதே தீ பற்றியுள்ளது.

குறித்த பஸ் தீ பற்றும் வேளையில் சாரதியும் நடத்துனரும் மட்டுமே பஸ்ஸினுள் இருந்துள்ளனர். பஸ் தீ பற்றியதை தொடர்ந்து சாரதியும் நடத்துனரும் வெளியே பாய்ந்துள்ளனர். இதனால் விபத்தில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லையென பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment