கோட்டாபயவிடம் புலனாய்வுப் பிரிவு 2 மணி நேர விசாரணை

246 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

நேற்று முற்பகல் 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையில் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொலை சதி முயற்சி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கே இவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment