புத்தளம் குப்பை தொட்டி அல்ல- பாலித்த

205 0

கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டுசென்று புத்தளத்தில் கொட்டுவதற்கு, அந்தப் பகுதி குப்பைத் தொட்டி அல்ல  பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டுசென்று புத்தளத்தில் கொட்டுவதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இத் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிடுகின்றமை நியாயமான விடயமாகும்.

குப்பை கொட்ட உள்ள அருவக்காலு பகுதிக்கு அருகில் கடல் அமைந்துள்ளதுடன், மக்களின் குடியிருப்பு மற்றும் கலாஓயா என்பன அமைந்துள்ளன.

இவ்வாறான நிலையிலேயே அப்பகுதியில் கழிவுகளைக் கொட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே அருவக்காலு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்தார்.

Leave a comment