எனது அமைச்சிலுள்ள நிதிகளை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பேன் என தேசிய நல்லிணக்க சுகவாழ்வு ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் தீர்வும் அபிவிருத்தியை சமாந்தரமாக மேற்கொண்டால் மாத்திரமே தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு உறுதி செய்யப்படும். அவ்வாறு இல்லாவிடின் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருப்போம்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கினோம் அவர்களிடமிருந்து வளங்களைப் பெறுவதற்கு எமக்கு உரிமை உள்ளது அவர்களிடம் பிச்சை கேட்டு பெறவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. ஆதற்காக தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றார்.
மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.