பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்தவாரம் நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பு பிரதமரின் இந்திய விஜயத்தின் போது புதுடில்லியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் இந்தியாவின் பொதுத் தேர்தல் நடைபெறவள்ள அதேவேளை இலங்கையின் ஜனாதிபதி தேர்தலும் நடத்தப்படவுள்ள சூழ்நிலையில் இரு நாட்டு பிரதமர்களின் இந்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.