வெலிக்கந்தை ருகுணுகெத கிராமத்தில் ஓடைக்குள் விழுந்து உயிரிழந்த காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாவதிய வனப் பிரதேசத்தில் சுற்றித்திரிந்த யானையே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓடைக்குள் விழுந்து உயிரிழந்திருந்த காட்டு யானையை அவதானித்த பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதன்பின்னர் அந்த அதிகாரிகள் சென்று சோதனை செய்துள்ளதுடன், அது 30 வயது மதிக்கத்தக்க யானை என்றும் தெரிவித்துள்ளனர்.
அந்த காட்டு யானை கடந்த சில காலமாக நோய் வாய்ப்பட்டிருந்ததாகவும், பல தடவைகள் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்ததாகவும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்