முச்சக்கர வண்டிகளின் பிரயாணக் கட்டணங்கள் அதிகரிப்பு

502 0

அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்ததைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி சங்கங்கள்  முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணங்களை அதிகரிக்க  தீர்மானித்துள்ளன.

முச்சக்கரவண்டி சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஆரம்ப கட்டணமாக அறவிடப்படும் 60 ரூபாவில் மாற்றம் இல்லை எனவும் இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் ரூபா 40 கட்டணத்தை ரூபா 50 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அச்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment