அரசாங்கத்தை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம்- பசில்

218 0

ஜனாதிபதியுடன் ஆட்சி மாற்றம் பற்றி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினோம் எனவும், என்ன பேசினோம் என்பதை உடனடியாக ஊடகங்களிடம் கூறிவிட முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அரசாங்கத்தை மாற்றுவது தொடர்பில் மாத்திரமே நாம் கதைத்தோம். பேசிய விடயங்கள் இரகசியமாகும். இரகசியத்தை வெளிப்படுத்தினால் பேச்சுவார்த்தைக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதனால் ஊடகங்களிடம் அவற்றைக் கூற முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment