கர்ப்பிணி சட்டத்தரணிகளின் உடை சம்பந்தமாக விஷேட வர்த்தமானி அறிவித்தல்

249 0

கர்ப்பிணி சட்டத்தரணிகளின் உடை சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டுள்ளது. 

அதன்படி காப்பிணித் தாய்மார்களுக்கான உடையானது வெள்ளை நிற நீண்ட கையுடைய மேற் சட்டையுடன் முழங்காலிற்கு கீழ் நீளமான, கழுத்து வரை அணியப்பட்ட கறுப்பு நிற நீண்ட சட்டை மற்றும் கறுப்பு நிற கோற் அல்லது கறுப்பு நிற நீளங்கியுடனான சட் டையாக அமைதல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .

வெள்ளை நிற, கறுப்பு நிற, சாம்பல் நிற அல்லது ஊதா நிற சேலையும் சட்டையும் அல்லது முழங்காலிற்குக் கீழ் நீளமான வெள்ளை நிற, கறுப்பு நிற, சாம்பல் நிற அல்லது ஊதா நிற நீண்ட சட்டை அனுமதிக்கப்பட்டுள்ளது.

அல்லது கறுப்பு நிற கோற் மற்றும் கணுக்கால் வரை நீண்ட கறுப்பு நிற காற்சட்டை மற்றும் காற்சட்டைக்குள் உட்செலுத்தி, கொலர் உடையதாக கழுத்து வரை அணியப்பட்ட வெள்ளை நிற நீண்ட கையுடைய மேற்சட்டை மற்றும் கறுப்பு நிற நீளங்கி ஆகியன அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment