இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வருகை!

241 0

இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண்  மற்றும் சீன வெளிவிவகார அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹீ ஷியான்லியாங் ஆகியோர் நாளை புதன் கிழமை இலங்கை வருகின்றனர். 

 

இந்து சமுத்திரம் – எமது எதிர்காலத்தை வரையறுத்தல் எனும் தொனிப்பொருளில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளடங்கலாக பல்வேறு பிராந்திய நாடுகள் கலந்துகொள்ளவுள்ள இருநாள் சர்வதேச மாநாடு எதிர்வரும்  வியாழக்கிழமை அலரிமாளிகையில் ஆரம்பமாக உள்ளது.

இதில் கலந்துக்கொள்வதற்காகவே இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண்  மற்றும் சீன வெளிவிவகார அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹீ ஷியான்லியாங் ஆகியோர்  இலங்கை வருகின்றனர்.

Leave a comment