 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மீள்கட்டுமாணங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லை. ஆகவே அதிகளவான நிதியை ஒதுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மீள்கட்டுமாணங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லை. ஆகவே அதிகளவான நிதியை ஒதுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மேலும் இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் நிதி அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண ஓய்வூதியர் தின நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் யாழ். விரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            