விஜயகலா பிணையில் விடுதலை

242 0

கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் அவரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment