நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று மழை

271 0

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (29)  பிற்பகல் அல்லது மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடருமெனவும் திணைக்களம் கூறியுள்ளது.

மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment