“தேர்தல் தோல்விக்கு அச்சப்பட்டே அரசாங்கம் மாகாணசபை தேர்தலை பிற்படுத்தி வருகின்றது!

280 0

தேர்தல் தோல்விக்கு அச்சப்பட்டே அரசாங்கம் மாகாணசபை தேர்தலை பிற்படுத்தி வருகின்றது. மக்கள் பிரதிநிதிகள் அற்ற ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியாது என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

 

சப்ரகமுவ மாகாணசபையின் மக்கள் பிரதிநிதிகள் அற்ற ஆட்சிக்கு ஒருவருடமாகியுள்ளது என தெரிவித்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2017 செப்டம்பர் 26ஆம் திகதி சப்ரகமுவ மாகாணசபையின் ஆட்சிக்காலம் நிறைவடைந்தது. இற்றைக்கு ஒருவருடமாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபை நிர்வகிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலூடாக  தெரிவுசெய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் அற்ற ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. மாகாணசபை தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாததொரு சூழலலே தற்போது ஏற்பட்டுள்ளது.

இற்றைக்கு ஒருவருடத்துக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்படுத்தும் நோக்கில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை முன்வைத்து உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிரதான நோக்கமாக இருந்தது தேர்தலை பிற்படுத்துவதே அன்றி, தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்வதல்ல என்பது தற்போது தெளிவாகின்றது.

Leave a comment