இன்றிரவு நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ. மழை-

218 0

நாட்டின் பல பாகங்களில் இன்று (24) இரவு இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய பிரதேசங்களுக்கு 100 மி.மீ. மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை (24) யும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு, களுத்தறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு காலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

Leave a comment