பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை ஊழியர் மீது தாக்குதல், 13 பேர் கைது

516 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் லக்கல பிரதேச சபை உறுப்பினர், சிலருடைய தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லக்கல, தெல்கமுஓயாவில் மதுபோயைில் குளிப்பதற்கு வந்திருந்த  சிலரினாலேயே இவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதேச சபை உறுப்பினர் போதையில் இருந்தவர்களுக்கு அறிவுரை கூறச் சென்ற வேளையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Leave a comment