விஜேரத்தினத்தின் மரணத்திற்கு நீதிகோரி இரத்தினபுரியில் மக்கள் ஆர்ப்பாட்டம்

355 0

இரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில்  சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட  விஜேரத்தினம் என்பர் நேற்று முன்தினம் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறுகோரி இன்று பகல் இரத்தினபுரி மணிகூட்டு கோபுரத்திற்கும் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்கும்  முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

மேற்படி ஆரப்பாட்டத்தில் மழை என்றும் பாராது பெருந்திரலான மலையக மக்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி நகரில் பல மணி நேரம் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது.

இந்நிலையில் கொலையுடன் சம்பந்தப்பட்ட  சந்தேகநபர்களுக்கு ஆதரவு வழங்காமல் உடனடியாக சந்தேகநபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் இவ்வாரான சம்பவம் இனிமேலும் இடபெற கூடாது என்றும் பதாதைகள் ஏந்தி கோசமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேற்படி ஆரப்பாட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் ரூபன் பெருமாள் இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா மற்றும் வர்த்தகர்கள் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட  பெருந்திரலானோர் இதில் கலந்து கொண்டனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் ரூபன் பெருமாள் மற்றும் இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா ஆகியோர் தலைமையிலான குழுவினருக்கும் இரத்தினபுரி பொலிஸ் அதிகாரிகளுக்கிடையே கலந்துரையாடல் ஒன்றும் இன்று பகல் இடம்பெற்றது.

இதன்போது மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் நான்கு முச்சக்கர வண்டிகள் உட்பட இரண்டு மோட்டார் சைக்கில்கள் என்பன  கைபற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள், நான்கு முச்சக்கர வண்டிகள் கைபற்றினால் அதன் உரிமையாளர்கள் எங்கே?

இரண்டு  சைக்கிள் வண்டிகள் கைபற்றினால் அதன் உரிமையாளர்கள் எங்கே? என்று கேள்வி எழுப்பி ஆவேசம் அடைந்தார்கள். இதன் முக்கிய சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறும் அவர்கள் பொலிஸாரிடம் ஆவேசத்துடன் கோரிகை விடுத்தனர்.

மேற்படி தோட்டப்பகுதிக்கு குருவிட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

Leave a comment