கிருலப்பனை – பொல்ஹேன்கொட சந்தியில்இருந்து பூர்வாராம் சந்தி வரையான பாதையில் கொழும்புக்கு உள்நுழையும் பக்க வீதி வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிருலப்பனை விஜயகுமாரதுங்க மாவத்தையில் மேற்கொள்ளப்படுகின்ற கழிவுநீர் வேலைத்திட்டம் காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முதல் அமுலாகும் வரையில் நவம்பர் மாதம் 28ஆம் திகதி வரை இந்த போக்குவரத்து முறை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வேண்டப்பட்டுள்ளனர்.