கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

239 0

கினிகத்தேனை பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைப்பினை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

குறித்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாலயகம ஹோகம எனும் பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வருவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விரைந்த கலால் திணக்கள அதிகாரிகள் இன்று நிலையத்தினை சுற்றிவளைத்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி குறித்த சந்தேக நபர் மற்றும் மீட்கப்பட்ட பொருட்கள் ஆகியன நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave a comment