நான் வளரவில்லை என துரைமுருகன் நினைத்தால் அரசியல் ரீதியாக ஸ்டாலினும் வளரவில்லை என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்மண்டல முதல்வர் மாநாட்டில் தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வன்முறையில் ஈடுபடுவது எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க. தான்.
பிரியாணி கடையில், பியூட்டி பார்லரில் வன்முறையில் ஈடுபடுவது யார் என அனைவருக்கும் தெரியும். பா.ஜனதா வளர்ந்து வரும் கட்சி. பா.ஜனதா பலமில்லாத கட்சி என்றால் எங்களை கண்டு அச்சப்படுவது ஏன்? தி.மு.க., அ.தி.மு.க.வை குறை கூறுகிறதோ இல்லையோ பா.ஜனதாவை விமர்சனம் செய்து வருகிறது.
அரசியல் ரீதியாக நான் வளர்ந்துள்ளேன். நான் வளரவில்லை என துரைமுருகன் நினைத்தால், ஸ்டாலினும் வளரவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது கூட்டணியில் இருந்த தி.மு.க. தமிழகத்திற்காக என்ன திட்டத்தை கொண்டு வந்தது