நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

365 0

மஸ்கெலியா மின்னா பெயாலோன் நீர்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா மின்னா பெயாலோன் தோட்ட பகுதியை சேர்ந்த கறுப்பையா லெச்சுமி (வயது 65) ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்திருப்பதாகவும், குறித்த வயோதிப பெண் காணாமல் போயுள்ளதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அவரின் உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்ததாகவும் மஸ்கெலியா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இன்றையதினம் பெயாலோன் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குறித்த பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருந்ததை கண்ட பொது மக்கள் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கபடுகிறது.

சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment