குளவி கொட்டுக்கு இலக்காகிய 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

198 0

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சமன்எலிய சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 20 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மதியம் 12:30 மணியளவில் பதிவாகியுள்ளது.

பாடசாலையின் மைதானத்தில் குறித்த மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் இருந்த பாரிய கல்லின் அடிப்பகுதியில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்து மாணவர்களைக் கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a comment