ஹொரணையில் அமோனியா வாயுத் தாங்கி வெடித்ததில் ஐவர் காயம்

203 0

ஹொரணை, இங்கிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணை, இங்கிரிய, பொறுவதன்னயிலுள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றிலுள்ள அமோனியா வாயுத் தாங்கி வெடித்ததிலேயே குறித்த 5 பேரும் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் இருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment