காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஜெனிவா செல்ல தடை!

221 0

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் 39வது கூட்டத்தொடத் தொடரில் கலந்து கொள்ளும் பொருட்டு அங்கு செல்வதற்கான விசா அனுமதி தமக்கு மறுக்கப்பட்டதாக, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் ;நேற்று 557 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்றைய தினம் அவர்களால் முல்லைத்தீவில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதன்போதே, முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி ஈஸ்வரி இதனை தெரிவித்துள்ளார்.

இதனால், ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டத்தொடரில் தம்மால் கலந்து சாட்சியமளிக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment