பாதுகாப்பு படைகளின் பிரதானியை தண்டிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது-எஸ்.பி திசாநாயக

225 0

பாதுகாப்பு படைகளின் பிரதானி மீதான குற்றச்சாட்டில் , காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவருமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள், ஆயுத மோதலின் போதே பிரதான புலிகள் காணாமல் போனார்கள்.

இவர்கள் குறித்து பாதுகாப்பு படைகளின் பிரதானியை தண்டிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுயாதீன அணி  தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்டவர்கள் மாணவர்களா, அல்லது வேறு யாருமா என  தெரியாது. ஆனால் இந்த காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு, கடத்தல், கொலை, கைதுகள் என அனைத்துமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவை   எனவும் அவ்வணி குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுயாதீன அணியினர் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே    பாராளுமன்ற உறுப்பினர்களான  டிலான் பெரேரா, எஸ்.பி திசாநாயக ஆகியோர் இதனை குறிப்பிட்டனர் .

Leave a comment