கதிரை கொள்வனவு இடைநிறுத்தம்-ஹேமகுமார நாணயக்கார

271 0

மேல் மாகாண சபைக்கு கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த அதிக விலையுடைய கதிரைகளை இறக்குமதி செய்வதை இரத்து செய்துள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார கூறியுள்ளார்.

மேல் மாகாண சபைக்கு ஒவ்வென்றும் 640,000 ரூபா பெறுமதியான 125 கதிரைகளை கதிரைகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

640,000 ரூபா பெறுமதியுடைய 144 கதிரைகளை பெல்ஜியமில் இருந்து கொள்வனவு செய்யும் திட்டத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.

இந்திலையில் அந்த திட்டத்தை முழுமையாக இரத்து செய்துள்ளதாக மேல்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார கூறியுள்ளார்.

Leave a comment