இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற இருந்த நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றவியல் விசாரணை பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியுடனான அடுத்த போட்டித் தொடரிற்கான ஔிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ய முற்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.