சுமந்திரன், நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்து வருகின்றார் -சுரேஷ் (காணொளி)

476 0

நல்லாட்சி அரசாங்கத்தில், சிங்களக் குடியேற்றம் நடைபெறவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கும் கருத்து, நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கில் வெளிப்படுத்தப்பட்டவை எனவும்

சமஷ்டி தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு எதுவுமே தெரியாது என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு, ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர்,சரியான முடிவை எடுக்க வேண்டும் எனவும்

உச்ச நீதிமன்றில், சமஷ்டி தொடர்பில் வாதாடி வெற்றி பெற்ற தனது தீர்ப்பை, தபால்காரராக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன், தலாதா மாளிகைக்கு கொண்டு சென்று ஆதரவு கோரினார் என,எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து மிகவும் கீழ்த்தரமானது எனவும்

தமிழ் மக்களுக்கான தீர்வில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை கைவிட்டு, தமிழ் தலைமைகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கட்டப்பிராயில் அமைந்துள்ள, தனது வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

Leave a comment