வடமாகாணத்தில் அதிகரிக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து போராட்டம்

211 0

வடமாகாணத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று (4) காலை காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து செல்வதாக குற்றம் சாட்டிய போராட்ட காரர்கள். வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை துரித கெதியில் முன்னெடுத்து அவர்களை தண்டிக்க வேண்டும் என கோரி இருந்தார்கள்.

Leave a comment